கொண்டரங்கி மலை வரலாறு 6
கொண்டரங்கி மலை வரலாறு அத்தியாயம் 6 எழுத்து -கொண்டரங்கி தனசேகர் (உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க ..அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள்... மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் ) காமதேனு கீரனூர் வந்து சேர்ந்த பின் அவளை பற்றியும் அவள் தோற்றம் பற்றியும் ஊர்க்காரர்கள் அதிசயித்து பேச ஆரம்பித்தனர் .அவள் மகா லக்ஷ்மியின் அம்சமாகவே அவர்களுக்கு தெரிந்தாள்.கீரனூர் விவசாயியும் அவளை நன்முறையில் கவனித்து கொண்டே இருந்தார் .அவளை விசேஷமான ஜீவனாகவே போற்றினர் .ஆனால் அவளின் தேடல் கொண்டரங்கி மலை மீதே இருந்தது .அவள் வந்து சேர்ந்த சில நாட்களாகவே கொண்டரங்கி மலையையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள்.அவளை எப்போதும் கட்டிப்போட்டே வைத்து இருந்தனர் . அவளும் மேய்ச்ச