கொண்டரங்கி மலை வரலாறு 14
கொண்டரங்கி மலை வரலாறு .. அத்தியாயம் 14 எழுத்து -கொண்டரங்கி தனசேகர் (உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க ..அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள்... மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் ) மாடுகளை மேய்க்க வந்த கீரனூர் விவசாய குடும்பத்தின் முதன்மை வேலையாள் கொண்டரங்கி மலை அடிவாரம் அசதியால் ஆழ்ந்து தூங்கியே விட்டான் .உயர்ப்புண்ணிய லோக ஆன்மாக்கள் காமதேனுவுக்கு சமிக்கினை செய்த அடுத்த வினாடியே அவள் கொண்டரங்கி மலை ஏற ஆரம்பித்தாள் . அவளுடனே அவள் பிள்ளையும் மலை ஏற ஆரம்பித்தான். இருவருமே வேகமாக ஏற ஆரம்பித்தனர் ....இந்தமுறை கொண்டரங்கி மலை உச்சி வரை செல்ல வேண்டும் என்று மனதுள் சங்கல்பம் எடுத்து ஏறிக்கொண்டு இருந்தாள் .உயர்ப்புண்ணிய லோக ஆன்மாக்களும் ,மத்திமலோக ஆன்மாக்களும் இன்று கொண்டரங்கி மலை சுயம்பு லிங்கமாக எழுந்தருளி இருக்கும் மல்லிகார்ஜுனரை காமதேனு தரிசித்துவிட்டு உலகி