கொண்டரங்கி மலை வரலாறு 15
கொண்டரங்கி மலை வரலாறு .. அத்தியாயம் 15 எழுத்து -கொண்டரங்கி தனசேகர் (உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க ..அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள்... மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் ) காமதேனு கொண்டரங்கி மலை உச்சிக்கு செல்லும் பாதையில் ஒவ்வொரு சக்கரங்களையும் யோக நிலையில் அறிந்தாள்.இப்போது கொண்டரங்கி ஆண்டவர் சுயம்பு லிங்கமாய் இருக்கும் இடத்துக்கு அருகில் வந்துவிட்டதை உணர்ந்தாள் .கொண்டரங்கி ஆண்டவர் மலையின் ஆக்கினை சக்கரத்தில் தான் எழுந்தருளி இருக்க வேண்டும் என்பதை நீர் சுனை அருகில் வந்தவுடன் உணர்ந்தாள் . இந்த சுனையே நீர் மையமாக யோகிகள் போற்றும் விசுக்தி சக்கரமாக உணர்ந்தாள் .அடுத்த ஆக்கினையில் எழுந்தருளி உள்ள மல்லிகார்ஜுனரை தேட ஆர்வப்பட்டாள். சுனையில் இருந்து நீர் ஒரு சிறு குகை போன்ற இடத்தில இருந்து