Posts

Showing posts from December, 2017

கொண்டரங்கி மலை வரலாறு-17

Image
                                                 கொண்டரங்கி மலை வரலாறு-17                                                                  எழுத்து -உருவாக்கம்: கொண்டரங்கி தனசேகர்  (உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள்... மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க .. )  காமதேனு கொண்டரங்கி மலை சென்று மல்லிகார்ஜுன ஸ்வாமிக்கு பால் அமுதை அபிஷேகமாக பாய்ச்சி தன் ஜென்ம பிறப்பின் கடனை நிறைவேற்றி கொண்டாள்.ஆனால் இந்த கடன் மூலம் தான் தனக்கு பெரும் பிரச்னை வரும் என்பதை அறிவாள்.கீரனூர் விவசாயி காமதேனுவின் மடியில் இருந்து ஒருசொட்டு பால் கூட கறக்க முடிய வில்லை . காமதேனு தன் பிள்ளையுடன் மேய்ச்சலுக்கு சென்று திரும்பும்போது எல்லாம் பால் வருவதே இல்லை .காமதேனு ஒவ்வொரு முறையும் மேய்ச்சலுக்கு அனுப்பும் போதும் அவள் கொண்டரங்கி மலை ஏறி சுயம்பு லிங்கமாய் வீற்று இருக்கும் மல்லி