கொண்டரங்கி மலை வரலாறு-18

                                           கொண்டரங்கி மலை வரலாறு-18

                                 
                              எழுத்து -உருவாக்கம்: கொண்டரங்கி தனசேகர் 
                                          
                                    நன்றி -திரு ஆனந்த்( புகைப்பட கலைஞர்)






(உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள்...
மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க ..)




கொண்டரங்கி ஆண்டவர்  விரைவில் தனக்கு நல்வழி காட்டுவார் என்று தீர்க்கமாக காமதேனு நம்பியதன் நாள் வந்தது. பொழுதும்  புலர்ந்தது ....

இன்று காமதேனுவை தான் மேய்ச்சலுக்கு கொண்டுபோவதாக கீரனூர் விவசாயி தன் குடும்பத்திடமும் மாடு மேய்பவனிடமும் சொன்னார்.காமதேனு இதனை கேட்டாள்.கொண்டரங்கி ஆண்டவரோடு ஐக்கியமாகும் நாள் வந்ததை உணர்ந்தாள் .இன்று நடக்க போகும் நிகழ்வுகள் வரும் காலத்தில் வழிவழியாய் மக்கள் வரலாற்றாக மாற்றுவார் என்பதை
உணர்ந்தாள் .

அன்று யாரும் காமதேனுவிடம் பால் கறக்க போக வில்லை .
கீரனூர் விவசாயி குடும்பத்தினர் அன்று ஏனோ அவர்களிடம் ஒரு தவிப்பு இருந்தது .காமதேனுவை அருகில் வந்து அவளின் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தனர்.வயிற்றையும் நெற்றியையும்  தடவி கொடுத்து  வருடிக்கொடுத்தபடி இருந்தனர் . 

காமதேனு அனைவரையும் நன்றியோடு பார்த்தாள்.அவளின் ஜென்ம பிறப்பு ஈடேறும் நாளை கொடுத்த கொண்டரங்கி மலை ஆண்டவரை உச்சி நோக்கியபடி இருந்தாள்.கீரனூர் விவசாயி காமதேனுவையும் அவள் பிள்ளையையும் அழைத்து மேய்ச்சலுக்கு செல்ல முனைந்தார் .

பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த அனைத்து மாடுகளும் அவளுக்கு விடைகொடுக்க ஒரே குரலில் கர்ஜித்தன .குடும்பத்தினருக்கு அவைகளின் கர்ஜனை சப்தமாக மட்டுமே கேட்டது .கீரனூர் விவசாயி வீட்டு வேலைக்காரர்களும் ,மாடு மேய்ப்பவர்களும் மற்ற மாடுகளை அழைத்தபடி முன்னோக்கி சென்றனர் .

கீரனூர் விவசாயி இன்று முதல் காமதேனுவை கண்காணிக்க முடிவு செய்தபடியால் ,அவரின் ஒட்டு மொத்த கவனமும் காமதேனுவின் மீதே இருந்தது .அவள் எப்போதும் கொண்டரங்கி மலை பார்த்த படியே சென்றதை அவர் கவனித்து கொண்டே  இருந்தார் .இதனிடையில் உயர் புண்ணிய லோக ஆன்மாக்கள் அன்று காலையிலேயே கொண்டரங்கி மலை  சென்று அவளின் மோக்ஷ நிலைக்கு தேவையான சூக்ஷமங்களை வழித்தடத்தில் உருவாக்கி கொண்டு இருந்தனர்.

மத்திம லோக  சூட்சம ஆன்மாக்கள் ,பாவ லோக ஆன்மாக்களான பைசாசிக சக்திகளும், தீய பாவ ஆன்மாக்களும் ,கொள்ளிவாய் சக்திகளும் , மோகினிகளும் காமதேனுவை  தரிசிக்க வாய்ப்பு கேட்டதுக்கு இணங்க அவைகளை கொண்டரங்கி மலை வெளியில் நிறுத்தி வைத்தன . அவைகள்  இருளான இடங்களில் அந்தரத்தில் மிதந்தபடி காமதேனுவை காண ஆவலாயின.

கீரனூர் விவசாயி கொண்டரங்கி மலை அடிவாரம் காமதேனுவை அழைத்து வந்து புற்களை மேய விட்டார் .அவளை பார்த்த பைசாசிக சக்திகளும் மற்ற தீய லோக ஆன்மாக்களும் ஒளி உருவத்துடன் நடந்து வருவதை கண்டு அதிசயித்து நின்றனர் .அவைகள் முன்னேறாத வண்ணம் மத்திம லோக ஆன்மாக்கள் கட்டுப்படுத்தி இருந்தனர் .

காமதேனு புற்களை மேயாமல் தன்னுடைய பிராணனை வெளிபிராணனோடு சேர்த்து தன் பிராணனை சூன்ய நிலைக்கு மாற்றிக்கொண்டே இருந்தாள் .அதனால் அவளால் நடக்க முடிய வில்லை .

அவள் பிள்ளை தன் தாயின் தவத்தை நினைத்து மகிழ்ந்தான் .மற்ற மாடுகள் மேய்ச்சலில் இருந்து கொண்டே காமதேனுவை கண்காணித்து கொண்டே இருந்தன.

கீரனூர் விவசாயி காமதேனுவை மேய்ச்சலுக்கு தன் எதிரே விட்டு விட்டு மரத்தடியில் ஒதுங்கி இளைப்பாறினார் .அவரின் மாடு மேய்ப்பவர்களும் அவருடன் இளைப்பாறினார் .காமதேனுவை பற்றி முன்னர் மேய்ச்சலுக்கு வந்த  போது நடந்த விஷயங்களை சொல்லிக்கொண்டு இருந்தனர் .

உச்சி தாண்டியது .காமதேனுவும் அவள் பிள்ளையும் கொண்டரங்கி மலை போக தயார் ஆகினர் . உயர் புண்ணிய லோக ஆன்மாக்கள் காமதேனுவின் அருகில் வந்து ஆசிர்வதித்தனர்.அவள் ஏற்று கொண்டாள். தான் புறப்பட தயார் ஆனதை உணர்த்தினாள்.உயர் புண்ணிய லோக ஆன்மாக்கள் இளைப்பாறிக்கொண்டு இருந்தவர்களை நித்திரை கலக்கத்தை உண்டு செய்தனர் .கீரனூர் விவசாயி காமதேனுவை பார்த்து கொண்டே இருந்தார் ..ஆனால் நித்திரை கலக்கத்தில் காமதேனு அருகில் இருந்தவாறு இருந்தவள் ..மெல்ல சற்று தொலைவில் போனாள்...பிறகு இன்னும் தூரம் தெரிந்தாள்....சில நொடிகளில் மறைந்தே போனாள் .


காமதேனு கொண்டரங்கி மலை அடிவாரம் வந்து சேர்ந்தாள்.மலை முன் தன் தலையை நிலத்தில் பதிய வைத்து நன்றி செலுத்தினாள்.மெல்ல முன்னேறி கொண்டரங்கி மலை ஏறினாள் .அவள் உயர் புண்ணிய லோக ஆன்மாக்கள் -மத்திம லோக  சூட்சம ஆன்மாக்கள் -பூத கணங்கள்-மோஹினிகள் -பைசாசிக சக்திகள் என அனைவரையும் கண்களால் ஆசிர்வதித்தாள் .அனைவரும் இவள் போன்ற யோக பிறப்பு தங்களுக்கு வரும் ஜென்மங்களில் கிடைக்க பிரார்த்தித்தனர் .

காமதேனுவும் அவள் பிள்ளையும் மலை ஏற ஆரம்பித்து விட்டனர் .சில நிமிடங்களில் உயர்ப்புண்ணிய லோக ஆன்மாக்கள் விவசாயியின் நித்திரையை மட்டும், மற்ற அனைத்து  மாடுகளையும் வைத்து  வாழ்த்தொலி எழுப்பி கலைத்தனர் .அவர் மெல்ல நித்திரை கலைந்து பார்க்க அவருக்கு முன் காமதேனு இல்லை ..அவர் சுற்றும் முற்று பார்த்தார் ... இல்லை ..மேய்ச்சல் நிலத்தில் பார்த்தார் ...இல்லை ...மாடுகளுக்கு இடையில் தேடினார் ...இல்லை ...அடிவாரம் தேடினார் ..இல்லை ..அனைத்து மாடுகளும் இருக்க இந்த மாடு மட்டும் எங்கே என்று தன்னுள் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தார் ...உயர்ப்புண்ணிய ஆன்மாக்களில் ஒருவர் கிளி ரூபத்தில் மலை மேல் உள்ள ஒரு மரத்தில்  கீச்சு குரல் எழுப்பி  கீரனூர் விவசாயியை கொண்டரங்கி மலையின் மீது பார்க்க வைத்தார் .
விவசாயி மலை பார்த்தார் லிங்க பிரமாண்டம் இன்று புது விதமாய் மலையில் தெரிந்தது .

சற்று தொலைவில் காமதேனுவும் அவள் பிள்ளையும் மலை மீது நடந்து கொண்டு சென்றதை பார்த்த அவருக்கு திகைப்பாகிற்று .இவர்கள் ஏன் இந்த மலை மீது செல்கிறார்கள் என்பதை அறிய அவரும் கொண்டரங்கி மலை மேல் ஏற தொடங்கினார் .காமதேனுவுக்கு விவசாயி வருவது தெரிந்து சாதாரணமாய் ஏறி நகர்ந்தாள்.இன்று கொண்டரங்கி மலை ஆண்டவருடன் ஐக்கியமாகும் தருணத்தையே அவள் எண்ணி கொண்டு இருந்தாள் .


ஆண்டவரை வெளிக்கொணரும் பாக்கியம் தனக்கு இந்த ஜென்மத்தில் கொடுக்க பட்டதை எண்ணி ஆனந்த கண்ணீர் சிந்தினாள்.தம்பட்டம் பாறை தாண்டி சென்றாள்.கீரனூர் விவசாயி தம்பட்டம் பாறை அருகே மறைவாய் பின்தொடர்ந்து சென்றார் .


கொண்டரங்கி  மலை ஆண்டவர் நடக்கும் அனைத்தையும் சுயம்பாய் இருந்து அகதியானத்தில் பார்த்து கொண்டு இருந்தார் .இன்று தான் வெளி உலகிட்கு வரப்போகும் நாளை நினைத்து தனக்குள்ளே நகைத்து கொண்டார் ..அந்த நகைப்பின் அர்த்தம் யாருக்கும் புரியாது ...அது மகாதேவனின் ரகசியம் .... காமதேனுவுக்கு பிறவி மோக்ஷம் கொடுக்க கொண்டரங்கி  மலை ஆண்டவர் தயாராய் இருந்தார் .அந்த நன்நாளை விரைவில் காண்போம் அன்பர்களே .....

   நன்றி ......






























































































Comments

  1. To Mr. Kondranki Dhanasekar,
    God Bless You, the first person I met, 's who know the secerts of KANDHAR SHASTI KAVASAM.
    My name is Balaboomi Suppiah.
    I have been RECITING the Kandhar Shasti Kavasam since from 32 years old.
    With this Kavasam I have done:-
    1. Creation
    2. Sustaining
    3. Destruction
    4. Knowledge and Wisdom
    5. Wealth
    6. Physical Strength.

    What I am going to tell you is something very important to you and to Naam Tamilar.

    I propose to the following person:-
    1. Seeman - Naam Tamilar
    2. Piush Manush
    3. Healer Baskhar,

    That the next Election 2019 that Tamil People will take over the control of
    Tamil Nadu.
    All these person ignored my proposition.
    If you have any Tamil who is Patriotic to Tamilnadu please forward to them.
    The person should be able to READ, WRITE AND SPEAK IN TAMIL.

    The Trojan Horse


    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கொண்டரங்கி மலை வரலாறு-19

கொண்டரங்கி மலை வரலாறு-12